ஐரோப்பா, தமிழ்நாடு மற்றும் பிற ஊர்களுக்கு…

9780670087013

 

ரொம்ப நாளா இந்த மாதிரி புத்தகம் வாங்கணும்னு ஆசை. புத்தகம் வர்றதுக்கு முன்னாடியே அவுட்லுக் ட்ராவலர்ல இந்தப் புத்தகத்தோட ஒரு பகுதி வந்துடுச்சு. படிச்சுப் பாத்து அன்னிக்கே முடிவு பண்ணது வாங்கணும்னு. இப்போதான் அமைஞ்சது. ஸ்கூல்ல வாத்தியாருங்க கூட பிக்னிக் போன அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். அங்க போகாத, இங்கப் போகாத, அங்க நிக்காதனு அவங்க பண்ணுற அலப்பறையே ஒரு தினுசா இருக்கும். படிச்சு முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சு, அடுத்த ஊருக்கு பஸ் இத்தனை மணிக்கு, அதுக்குள்ள அங்க போகணும்னெல்லாம் டென்ஷனே இல்லாம ஊர் சுத்துவோம் பாருங்க அதுதான் சுகம்.

ஆனா இந்த புத்தகத்தை எழுதின ஸ்ரீநாத் பெரூர் கொஞ்சம் வித்தியாசமானவர் போல இருக்கு. இந்தியா பூரா பேக்கேஜ் டூர்ல சுத்தியிருக்கார். அதுதான் “If it’s Monday It must be Madurai” அருமையான வகையான டிராவல். பேக்கேஜ் டூர்னா நமக்கு மட்டும் திட்டம் போட்டும் டிராவல் கம்பெனில அனுப்புவாங்களே அது மாதிரி இல்லை. ஒரு குருப்போட சேர்ந்து ஊர சுத்திப் பாக்குறது.

முதல் அத்தியாயமே நம்ம ஊர் தான். சென்னை டு கன்னியாகுமரி பத்து நாள் டூர். எப்படி நம்ம ஊர்க்காரங்க மட்டுமில்லாம, பல மாநிலத்துக்காரங்களும் இந்த டூரை எடுக்குறாங்க, அதிகமா யார் வர்றாங்க. அவங்க மத்தவங்களை எப்படி நடத்துறாங்க, அவங்க எப்படி நடந்துக்குறாங்கனு எல்லாம் ரொம்ப சுவையா எழுதியிருக்கார். தஞ்சாவூர்ல ஒரு மாளிகைய ஹோட்டலா மாத்தி வெச்சிருக்காங்க. அங்க தங்கினா பாத்ரூம்லயே கபடி விளையாடலாம் போன்ற அதிமுக்கியமான் விஷயங்களைப் போற போக்கில சொல்லிட்டு போயிடுறாப்புல. சில சம்பவங்களைப் படிக்கும் போது நானும் தலை ஆட்டிகிட்டேதான் படிச்சேன்.

அடுத்து ஐரோப்பிய பயணம். இங்கயும் கூட்டத்தோடதான். பல மாநிலங்கள்ல இருந்து வந்த மக்கள் முதல் முறையா ஐரோப்பாவை எப்படிப் பாக்குறாங்க. அவங்களுக்கு எதெல்லாம் ஒத்துப் போச்சு, எதெல்லாம் ஒத்துப் போகலை. எப்படி 40 ரூபா கட்டி பாத்ரூம் போக மனசில்லாம 10 மைலுக்கு கால் மேல கால் போட்டு உக்காந்திருந்தாங்க, எப்படி சில ஆர்வகோளாறு, டூருக்கு முன்னாடியே விக்கிப்பீடியால எல்லாத்தயும் படிச்சுட்டு கைடுக்கு மொக்கை குடுப்பாங்க. ஐரோப்பாவோட கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட முக்கியமான இடங்களை எல்லாம் விட்டுட்டு சும்மா போட்டோ எடுக்கக் கூடிய இடத்துக்கு மட்டும் போயிட்டு வந்தாங்கனு ரொம்ப விலாவரியான விவரணைகள்.

இவரோட உஸ்பெகிஸ்தான் பத்திய கட்டுரை ரொம்ப முக்கியமானது. நாளொரு சாதா ரேப் பொழுதொரு கேங் ரேப்னு போயிட்டிருக்குற நம்ம ஊர்ல, யாராவது தாய்லாந்து போறேன்னு சொன்னாலே ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்குறாங்க. ஆனா விவரம் தெரிஞ்சவங்க இப்போ தாய்லாந்தெல்லாம் போறதில்லை. உஸ்பெகிஸ்தான் தான் போறாங்க. அங்க இதை ஒரு மிகப்பெரிய தொழிலா அங்க இருக்குற மாபியாவும், டூர் ஆப்பரேட்டர்களும் பயன்படுத்திகுறாங்க. சில சமயங்கள இந்திய ஆண்களோட மனநிலைய புரிஞ்சுக்கவே முடியுறதில்லை. தன் நாட்டுல கூட தன்னை சேர்ந்த பொண்ணுங்க மட்டும் உருப்படியா இருக்கணும், மத்தவங்க எல்லாம் தாசியா இருக்கணும்னு நினைக்குற சில பேர், உஸ்பெகிஸ்தான் போனா என்னவாகும்? பெண்களை மதிக்குறத பத்தியும், நம்மாட்கள்க்கு வெளிநாட்டுல இருக்குற கெட்ட பேர் பத்தியும் படிக்க படிக்க ரொம்ப கோவம் வருது. எனக்கு உஸ்பெகிஸ்தானைப் பத்தி தெரிஞ்சதெல்லாம் தஷ்கண்ட் அக்ரிமெண்ட் தான். அங்க இருக்குற சாஸ்திரி மெமோரியலுக்கு போகக் கூட நம்மாள்கள் டைம் வேஸ்ட்னு நினைக்குறாங்கங்குறதைப் படிக்கும் போது.. விடுங்க என்னத்தை சொல்லி என்னாகப் பொகுது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுவாரசியமா முடிக்குறார் ஸ்ரீநாத். அங்கதான் அவர் ஒரு பயண எழுத்தாளர்/பத்திரிக்கையாளர்னு பளிச்சினு தெரியுது. இந்த மாதிரி சொகுசுப் பயணத்துக்கு மட்டும் தான் இவர் போவாரானு பாத்தா இல்லை, தாராவி குப்பத்து டூர், கபீர் நினைவு இசைபயணங்கள்னு பக்கத்துக்கு பக்கம் சுவாரசியம்.

முக்கியமா, இவர் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றதைப் பத்தியான ஒரு அத்தியாயம் வருது. அதைப் பத்தி அதிகம் சொல்ல விரும்பலை. எப்படி பல சமயங்கள்ல பிரயாணம் பண்ணும் போது, போட்டோ எடுக்கவும், முக்கியமான விஷயங்களைக் குறிச்சு வைக்கவும், அடுத்த இடத்துக்குப் போக பஸ்ஸோ டிரெயினோ பிடிக்க ஓடுறதையுமே நம்ம பண்ணுறோம்னு இந்தப் புத்தகம் ரொம்ப சிந்திக்க வைக்குது. அதுவா பயணம். நம்ம நாமளே தொலைக்கணுமில்லையா, நாம யாரு, நமக்கு என்ன வேணும்னு கண்டுபிடிக்கணுமில்லையா, இதையெல்லாம் நம்ம பண்ணுறோமா? ஏன் பண்ணுறதில்லை? பண்ணா வாழ்க்கை எப்படி மாறலாம்னு ரொம்ப அழகா சொல்லியிருக்கார்.

இப்பல்லாம் நான் பாக்குற ரெஸ்யூம்கள்ல பாடல் கேட்பது, புத்தகம் படிப்பதைத் தவிர பொழுதுபோக்குகள் கட்டத்துல பயணமும் சேர்ந்திருக்கு. உண்மையான பயணம் செல்ல விரும்புறவங்க இதை ஒரு தடவை படிச்சுக்குறது நலம். ஒரே இடத்தை ரெண்டு தடவை பாக்க முடியும்னா வேண்டாம்னா இருக்கு?

Comments

  1. ஜென்

    இதை படிக்கும்போது அந்த புத்தகத்தை வாங்கி படிக்கணும்னு ஒரு ஆவல் வருது.
    நம்ம மக்களை பற்றி சொல்லி இருக்கும் சில விஷயங்கள் உண்மை தான் 🙂

    1. Bragadeesh Prasanna

      நம்ம மக்கள் மட்டுமில்லைஜி, உலகத்துல எல்லார் மனசுலயும் வக்கிரம், சின்ன புத்தி எல்லாம் இருக்கத்தான் செய்யுது. நமக்கு நம்மள நாமே குறை சொல்லிகுறதுல ஒரு போதை.. நல்ல வேளையா வெளிநாட்டுக்காரன் யாராச்சும் சொன்னா கோவம் வருது. அது வரைக்கும் சந்தோஷம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.