மகாமுனி மகாத்மியம்..
நான் பெரிய புதிய இலக்கிய ரசிகன் இல்லை. சிற்சில புது எழுத்தாளர்களை படித்துவிட்டு போதும்டா சாமி என மறுபடியும் கல்கி, தேவன், புதுமைப்பித்தன் என ஒதுங்கியவன். இந்த முறை புத்தகக் கண்காட்ச்சியில் மகாமுனினு ஒரு புத்தகத்தை அண்ணன் எடுத்து (வாங்கி) வந்திருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தது படமே இல்லாமல் எழுத்துக்களாய் இருந்ததால் வைத்துவிட்டேன்.
எங்களறையில் போன் அருகில் கம்புயூட்டர். வந்த போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்வதற்குள் கம்ப்யூட்டர் கை விட்டுப் போயிருந்தது.. 155ம் பக்கத்தில் மகாமுனினு ஒரு கதை இருக்கும், படிச்சு முடிக்குறதுகுள்ள குடுக்குறேன்னு கண்டிஷன் வேற.. சரி படிக்கலாம்னு எடுத்தா… கீழ வைக்க முடியலை.
நான் கதைய பத்தி பெருசா ஒண்ணும் சொல்லப் போறதில்லை. இது ஒரு அருமையான வாசிப்பு அனுபவம். கண்டிப்பா எல்லாரும் இதை அனுபவிக்கணும். எத்தனை விதமான மனிதர்கள்.. ஒரு மனிதன் தன்னைப் பத்தி மத்தவங்க நினைச்சிருக்குறது சரினு நிரூபிக்க (அது பொய்யாய் இருந்தாலும்) எந்த அளவுக்கு போவான் அப்படிங்குறது தான் கதை. இந்தக் கதைய இன்னும் கய் ரிச்சி படிக்கலை அல்லது அவருக்கு யாரும் இதை மொழிபெயர்க்கலை. ஒரு வேளை படிச்சிருந்தா இந்நேரம் எதாவது ஒரு பிரென்சு கிராமத்துல ப்ரட் பிட் நடிச்சுட்டு இருக்கலாம்.
பீடிகை 1, பீடிகை 2 அப்படின்னு தொடங்குற கதை எப்படி எல்லாம், எங்கெல்லாம் போகுது. பழைய ஆவணங்களோட மதிப்பு இப்ப இல்லை ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கூட யாருக்கும் தெரியலை. அதனாலயே பல விஷயங்கள இழந்த்திருக்கோம். இந்தக் கதைல ஒரு கத்தி வருது. அருமையான வர்ணணைகளோட அந்தக் கத்திய விவரிச்சிருக்காங்க. தொட்டதுகெல்லாம் அந்த காலத்துல கோவப்பட்டு பல கொலைகள் நடந்திருக்கு போல. இதைப் போல கொலைகளப் பண்ண அப்பல்லாம் இருந்த வஸ்தாது ஒருத்தர் தான் மகாமுனி.
ஆள் கொலையும் பண்றார்.. விஷக்கடி மருந்தும் கொடுக்குறார். ஆச்சரியமான விஷயம் இது. எப்படி உயிர காப்பத்துற ஒருத்தனுக்கு உயிர எடுக்கவும் மனசு வருது. அவரப் பத்தி அவர் பேசுறாரோ இல்லையோ ஊர் உலகம் பயங்கரமா பேசுது. அவர் கைல இருக்குற கத்தியால குத்தினா கொல்லப்பட்டவருக்கு ரத்தமே வராது. கத்தில கைரேகையும் படாதுங்குறது தான் ஹைலைட். அதனாலயே மர்மமா அவர் ஏரியால யாராவது செத்தா மகாமுனி தான் பண்ணாருன்னு ஊர்க்காரங்க குசுகுசுனு பேசிக்கிறாங்க.
இதை மகாமுனி என்னிக்கும் மறுத்ததும் இல்லை. ஒத்துகிட்டதும் இல்லை. இப்படி இருக்கும் போது இவர் கைல ஒரு 4 அசைன்மெண்ட் மாட்டுது. வேணாம்னு சொல்லி தலைமறைவா இருந்து இருவது நாள் கழிச்சி பாத்தா நாலு பேருமே குளோஸ். ஆனா மகாமுனி கோர்ட்ல அவர்தான் எல்லாக் கொலையும் பண்ணதா சொல்லி ஒத்துக்குறார்.
இதான் கதை. ஆனா பிரேம் ரமேஷ் எழுத்து உங்களை பழைய பாண்டிச்சேரி வீதி வழியா இழுத்துட்டு போகுது பாருங்க.. வார்த்தைகளுக்குள் புதைத்த அற்புதமான நகைச்சுவை கதைக்கு வெளில உங்கள யோசிக்கவே வைக்காது. ஒரு கட்டுரைல ஜெமோ சொல்லியிருப்பார். சிறுகதைங்குறது ஒரு முடிவை நோக்கி அல்ல ஒரு திருப்பத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்தத் திருப்பத்தில் அதை நிறுத்தத் தெரிய்வது தான் ஒரு சிறந்த சிறுகதையாளனின் வெற்றினு. அருமையா அதைப் பண்ணிருக்காங்க.
கண்டிப்பா வாசிச்சு பாருங்க. மகாமுனினு இவங்க சிறுகதை தொகுப்பு வெளிவந்திருக்கு.
Comments
Kandippaa vaasichuduraen. Puththagathoda vivaram sonnenganaa ungalukku punniyamaa pogum.