அடுத்தவர் வாழ்க்கை..

நம்ம ஆட்களுக்கு அடுத்தவனை வேவு பாக்குறதுன்னா அவ்வளவு குஷி. அவன் சாதாரணமா செய்யுற விஷயத்த கூட எவ்வளவு ஊத முடியுமோ அவ்வளவு ஊதுறது. சில பேர், நாம பாக்குறோம்னு தெரிஞ்சா போடுவாங்க பாருங்க சீனு.. தாங்க முடியாது. ஆனா சில பேருக்கு அது தான் வேலையே. சத்தியமா ஒரு மாசத்துக்கு மேல பிடிச்சு அந்த வேலைய செய்ய முடியாது.

அப்படி ஒருத்தரை பத்தி வேவு பாக்க வெச்ச ஆள், அந்த மனுஷன காப்பாத்துறார். எப்படி அப்படின்ற படம் தான், “The Lives of Others”. இது ஒரு ஜெர்மன் படம். 1980கள்ல கிழக்கு மேற்கு ஜெர்மனி பிரிஞ்சிருந்தப்ப நடந்த விஷயங்கள சொல்லி இருக்காங்க.

 

வெய்ஸ்லர்னு ஒரு இன்ஸ்பெக்டர் தன் நண்பனை மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச்சு போக உதவியா இருந்த ஒருத்தனை விசாரிக்குறதுல படம் ஆரம்பிக்குது. அவனை தூங்க விடாம தொடர்ந்து கேள்வி கேட்டு அவனை மிரட்டி பதில் வாங்குறார். அதை அகாடமில இருக்குற பசங்களுக்கும் சொல்லித் தரார். வெய்ஸ்லர் ஒரு தனிமையான மனுஷன். வீடு துப்புறவா இருக்கும். யார் கூடவும் பெருசா பேசுறதில்ல. அப்போ அவரோட சீனியர் ஒருத்தர் வந்து ஒரு நாடகம் பாக்க கூட்டிட்டு போறார்.

நாடகம் எழுதினவர் பேரு டிரேமேன். அவரை பாத்தா நம்ம வெய்ஸ்லருக்கு சத்தமில்லாம மேற்கு ஜெர்மனிக்கு சப்போர்ட் பண்ற ஆள் மாதிரி தெரியுது. ஆனா சீனியர் ஒத்துக்க மாட்டேங்குறார். அந்த நாடகத்துல டிரேமேனோட காதலி கிறிஸ்டா நடிச்சிருக்காங்க. அந்த நாடகம் பாக்க வந்த மந்திரி ஒருத்தர், கிறிஸ்டா மேல ஆசைப்படுறார். அப்போ கிழக்கு ஜெர்மனியில பயங்கர கலாசார ஆதிக்கம். அரசாங்கத்துக்கு எதிராவோ இல்லை மேற்கு ஜெர்மனிக்கு ஆதரவாவோ யாராவது பேசினாலோ எழுதினாலோ அவங்களை உடனே கைது பண்றது இல்லை வேற வழில டார்ச்சர் பண்றதுன்னு அநியாயம் பண்றாங்க.  அதனால தன் பவர யூஸ் பண்ணி இந்த மந்திரி, சீனியர டிரேமேனை வேவு பாக்க சொல்றார். சீனியர் இந்த வேலைய வெய்ஸ்லருக்கு தரார்.

அப்போலேருந்து வெய்ஸ்லர் டிரேமேனை நோட்டம் விடுறார். அவங்க வீட்டை அங்குல அங்குலமா வயர் பொருத்தி வீட்ல எங்க இருந்து பேசினாலும் போலீசுக்கு கேக்குற மாதிரி செட் பண்றாங்க. பகல் முழுசும் வெய்ஸ்லரே கேக்குறார். நாள் முடிவுல அதை ஒரு ரிப்போர்ட்டா டைப் பண்ணி எடுத்துக்குறார். இதுக்கு நடுவுல வேவு பாக்க வெச்சது அரசாங்கத்துக்காக இல்லை, மந்திரிக்கு அந்த நடிகை மேல உள்ள ஆசையில அப்படின்னு வெய்ஸ்லருக்கு தெரிய வருது. ஆனா சீனியர் அதை எல்லாம் கண்டுக்க தயாராயில்லை. முடிஞ்சா அதை பத்தியும் ஒரு கண் வைக்க சொல்லி சொல்றார்.

நல்லவரா இருக்குற டிரேமேன் மேல வெய்ஸ்லருக்கு ஒரு அபிப்ராயம் வருது அது மட்டுமில்லாம  ஒரு பரிதாபமும் வருது. ஒரு தடவை வேற வழி இல்லாம மந்திரி ஆசைக்கு சம்மதிச்சு அவர் கார்ல இருந்து இறங்கி வர்ற கிறிஸ்டாவ டிரேமேன் கிட்ட மாட்டியும் குடுக்குறார். (பேசாம தான். எப்படின்னு படத்துல பாருங்க). ஆனா அவங்க சண்டை போட்டுக்கலை. அடுத்த தடவை அவங்க மந்திரிய பாக்க போகும் போது டிரேமேன் நாகரீகமா தடுக்குறார். ஆனா கிறிஸ்டா போறாங்க. இதை எல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு இருக்குற வெய்ஸ்லர், அவங்க கிட்ட பேசி திரும்ப வீட்டுக்கு போக வைக்குறார்.

இனி இவங்களை கண்காணிக்க தேவை இல்லைனு இவர் சொல்லும்போது, டிரேமேனோட நண்பர் ஒருத்தர் இறந்து போறார். அந்த கடுப்புல நம்ம எழுத்தாளர், கிழக்கு ஜெர்மனிய காய்ச்சி எடுத்து ஒரு கட்டுரை எழுதுறார். கட்டுரை பிரசுரிக்குற பத்திரிக்கை ஆசிரியர், கைல எழுதுனா மாட்டிக்குவ தலைவா, அப்படின்னு, ஒரு டைப்ரைட்டர் மறைச்சு கொண்டு வரார் (அப்போ அது எல்லாம் பெரிய குத்தம் போல இருக்கு.). அந்த டைப் ரட்டரை வீட்டுல குழி தோண்டி புதைக்கெல்லாம் செய்யறாங்க. இது எல்லாம் நம்ம வெய்ஸ்லருக்கு தெரியும் ஆனா யார்கிட்டயும் அவர் சொல்லலை. அந்த கட்டுரையும் வந்துடுது, நம்ம சீனியர் போலீஸ எல்லாரும் வறுத்து எடுக்குறாங்க.

கிறிஸ்டா வர்றதில்லைனு கடுப்பான மந்திரி, டிரேமேன் தான் அந்த கட்டுரைய எழுதினார்னு போற போக்குல போட்டு போறார். ஒரு தடவை போய் வீட்ல தேடி பாக்குறாங்க எதுவும் அகப்பட மாட்டேங்குது. எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு கிறிஸ்டாவ அரெஸ்ட் பண்ணி விசாரணை வல்லவரான வெய்ஸ்லர விசாரிக்க சொல்றாங்க. வேற வழியில்லாம கிறிஸ்டா டைப் ரைட்டர் இருக்குற இடத்த சொல்லிடுறாங்க. எப்படியாவது இவங்க ரெண்டு பேரை காப்பத்தணும்னு நினைக்குற வெய்ஸ்லர், வீட்டை உடைச்சு டைப் ரைட்டர தன் கார்ல வெச்சுடுறார். வீட்ட மறுபடி சோதனை போட போலீஸ்காரங்க வராங்க. தன் கிட்ட எந்த தப்பும் இல்லாத மாதிரி டிரேமேன் இருக்க, தன் கணவர் மாட்டிக்குறத பாக்க முடியாத கிறிஸ்டா வெளிய ஓடி லாரில அடிபடுறாங்க. இதை பாக்குற வெய்ஸ்லர், அவங்க கிட்ட போய் தான் தான் டைப் ரைட்டர எடுத்ததா சொல்லும்போது கிறிஸ்டா இறந்துடறாங்க.

தன் மனைவிதான் தன்னைக் காப்பாத்த டைப் ரைட்டர எடுத்ததா நினைக்குற டிரேமேன், குலுங்கி அழுறார். இப்ப தேடுதல் பிளாப் ஆனதுக்கு காரணம் வெய்ஸ்லர் தான்னு சீனியருக்கு தெரியும். ஆனா ஆதாரம் இல்லை. அதனால அவருக்கு பணி தரக்குறைவு செஞ்சு 20 வருஷத்துக்கு பதவி உயர்வு கிடைக்காத மாதிரி பண்ணிடுறார்.

எழுத்தாளர் டிரேமேனுக்கு வெய்ஸ்லரோட தியாகம் தெரிஞ்சதா? அவர் எப்படி தன் நன்றிய காமிச்சார்னு படம் பாத்து தெரிஞ்சுக்குங்க.

வெய்ஸ்லரா நடிச்ச உல்ரிச் முஹெ பத்தி கண்டிப்பா சொல்லணும். இந்த படத்துக்கு முன்னாடி அவர் பெரிய ஆள் எல்லாம் கிடையாது போல இருக்கு. ஆனா அப்படி ஒரு நடிப்பு. படம் முழுக்குஅ ஒரு கண் இமை அசையணுமே, ஒரு புன்னைகை வரணுமே. ம்ஹும். அப்படி ஒரு அசாதரணமான நடிப்பு. தன் நண்பன் செத்து போகும்போது டிரேமேன் இசைக்கும் சோக கீதம் கேக்கும் போது அவரையும் அறியாம அவர் கண்ல தண்ணி வர்ற சீன் டாப் கிளாஸ். பாவம் மனுஷன் இறந்துட்டார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு பயங்கர பலம். தேவை இல்லாம ஒரு சீன் கிடையாது. அமைதியான காட்சிகளா இருந்தாலும் சீட் நுனில நம்மள உக்கார வெச்சிருக்காங்க. படம் ஆஸ்கர் வாங்குச்சு. படத்தோட டிரைலர் இங்க.

 

படிச்சது பிடிச்சிருந்தா சொல்லிட்டு போங்க. சந்தோஷப்படுவேன்ல.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.